Posts

Image
 உ 'Schindler's List' nth முறையாக Blue Ray version பார்த்துக் கொண்டிருக்கேன். வாழ்நாளில் ஒரு இயக்குனருக்கு இம் மாதிரியான படம் ஒன்று போதும்! .ஏன் ? ரசிகனுக்கும் தான்!  படம் தொடங்கி சில நிமிடங்களில் ஸ்டீவன் ஸ்பீல்பர்க் கிற்கு நன்றிசொல்லும் நாம் படம் முடிந்தவுடன் லூமியர் சகோதரர்களுக்கு நன்றி சொல்லுவோம். கடவுளுக்கு நன்றி சொல்வதா அல்லது கோபித்து கொள்வதா என்று தெரியாமல் திணறுவோம். பிகு:என்னுடைய சிறிய ஆசை.RG list ஒன்று என் நட்பு வட்டத்திலிருந்து தேர்வு செய்து அவர்களுடன் அமர்ந்து இந்த படத்தை பார்க்க வேண்டும். 25th August 2018
 ௨ திருமால் பெருமை ******************** மாலை மணி ஐந்து; தி.நகர் வெங்கடநாராயணா சாலையில், TTDயை ஒட்டிய அந்த 150 மீட்டர் தூரம் யுத்த பூமி போல காட்சி அளிக்கிறது. ஏதோ போலீஸ் தடியடி நடந்த இடம் போல செருப்புகள் சிதறிக்கிடக்கின்றன தொன்னை தொன்னையாக பொங்கல் தயிர்சாதம் பிரசாதம் அள்ளி வீசப்பட்டு மிதிபடுகிறது. பெரிய Q வரிசை வேகமாக நகர்கிறது.ஒரு விநாடி நின்றால் பின்னால் நிற்பவர் ஒரு முறைமுறைத்த வண்ணம் நம்மை தாண்டி செல்கிறார். நம்மிடம், உளுந்துர்பேட்டை அருகே புவனேஸ்வரி நகர் லேஅவுட் நோட்டீஸ்,(மனை இரண்டே லட்ச ரூபாய்) குங்குமம் மடிக்க அளிக்கப்படுகிறது. உள்ளே சன்னதியை மறைத்துக்கொண்டு அர்ச்சகர்கள், சன்னதியை விட்டு தள்ளினாலும் நகராத பக்த கோடிகள், என ஒரே இரைச்சல். இத்தனையும் மீறி சர்வாலங்கார பூஷிதராக பல வண்ண பட்டாடை மலர் மாலைகள் அணிந்து அபயஅஸ்தம் காட்டி நம்மை ரட்சிக்கிறார் பெருமாள்.. "ஏடு கொண்டல வாடா வேங்கடேசா! கோவிந்தா! கோவிந்தா!!"
Image
 உ இன்று காலை நடந்த ஒரு நிகழ்வு அழைப்புமணி ஒலிக்க கதவை திறக்கிறேன் எங்கள் குடியிருப்பு காவலாளி (வயது 75) கையில் நான் கொடுத்துள்ள சிறு குறிப்பு புத்தகத்துடன் என்னைப்பார்த்து தலையை சொறிகிறார். "என்ன விஷயம் அய்யா?ஒண்ணாம் தேதிதானே சம்பளம் வாங்கினீங்க !அதுக்குள்ள அட்வான்சா?" "இல்ல என் சம்பளத்தில் 1000 ரூபா பிடித்தம் செஞ்சுருக்கீங்க!" "ஆமாம்! அதுதான் இந்த புக்கில் எழுதியிருக்கேனே ?" அவர் வாங்கும் அட்வான்ஸ், பிடித்தம், கொடுத்த சம்பளம் ஆகியவற்றை நான் குறித்து கொடுக்கும் புத்தகம் அது. "நான் போன மாதம் நானூறு ரூபாதான் அட்வான்ஸ் வாங்கினேன் சார்! ஆனா ஆயிரம் ரூபா பிடிச்சிருக்கீங்க!" "ஆமாய்யா ! அதுக்கு முன்னாடி மாசமெல்லாம் பாருங்க! 1000 1500 என்றெல்லாம் அட்வான்ஸ் வாங்கிருக்கீங்க.ஆனா நான் மாதா மாதம் பிடித்தம் செய்வது 1000 ரூபா தான் அதான் இப்போ இன்னும் 1600 ரூபா பாக்கி உங்க கணக்கில் இருக்கு!" இது அவருக்கு மேலும் அதிர்ச்சியாக இருப்பதை அவர் முகம் பிரதிபலிக்க, "பெரியவரே நான்றாக பாருங்கள்!" என்று அந்த நோட்டை காண்பித்து விளக்க ஆரம்பித்தேன் "எ...
 உ "உன்னதம்." (நண்பர் எம்.எஸ்.பெருமாள் கமெண்ட் ஒன்றில் சொன்னதை கருவாக கொண்டு,ஒரு பதிவாக இங்கே தருகிறேன்) ஜெயகாந்தன் அவர்களின் பிரம்மோபதேசம் கதையை நடிகர் எஸ் வி சுப்பையா "குருவே தெய்வம்" என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கிறார்.இப்படம், இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு சொந்தமான கற்பகம் ஸ்டூடியோவில் படமாக்கப்படுகிறது படம் வெளியான பின்னர் இவ்வகையில் கேஎஸ்ஜி க்கு, எஸ்விஎஸ் சுமார் 50000 ரூபா தரவேண்டி உள்ளது.ஆனால் தர முடியாத பண நெருக்கடி. கேஎஸ்ஜி ஒரு யோசனை சொல்கிறார். "ஒரு படத்துக்கு ரூ 20000 வீதம் ஒரு வருடத்தில் எனக்கு மூன்று படங்கள் நடித்துக்கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டுக்கொள்வோம்ண்ணே! நீங்க கொடுக்க வேண்டிய துகையும் பைசல் ஆகிவிடும்!" எஸ்விஎஸ் சொல்கிறார். " நான் படத்துக்கு பத்தாயிரந்தானே வாங்குறேன் .. என்னெ பேராசைக்காரன் ஆக்கிடாதேப்பா ...அஞ்சு படத்துலெ நடிச்சு கழிச்சிடறேன்!அப்படி பத்திரத்தை மாத்திக் கொண்டு வா ...." இது நடந்து முடிய, முதல் படம் " ஆதி பராசக்தி " தொடங்குகிறது சுப்பையா அபிராமி பட்டராக நடிக்கிறார். அரசனுடன் கோவிலில் வாதி...

" மஹா பெரியவா சரணம்"

 உ நானும் பைத்தியமாக ஆகலாமா என்று நினைத்துப் பார்க்கின்றேன்,நீ என்னப்பா சொல்கிறாய்? புத்தி ஸ்வாதீனமில்லாத ஒரு பையனைப் பார்த்து பெரியவா வன்முறையில் ஈடுபடாத புத்திஸ்வாதீனமில்லாதவர்கள் ஞானிகளாகலாம் கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா . புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன் . (முன்பு சற்று சுருக்கமான பதிவு.இப்போ விரிவானது) ஒரு சமயம்,ஸ்ரீ பெரியவாள் கலவையில் பல தினங்கள் தங்கியிருந்தார்கள்.அப்போது ஓர் ஏகாதசி நாளன்று அவர்கள், கலவையிலிருந்து சற்று தூரத்தில் உள்ள மடுவிருக்குமிடம் சென்று, மடுவில் ஸ்நானம் செய்து கொண்டிருந்தார். பெரியவர்களுக்குக் கைங்கர்யம் செய்பவர்கள் சிலரைத் தவிர, அங்கு வேறு எவருமில்லை. அப்போது அவ்விடத்திற்கு ஒரு மனிதர் தன் மனைவியுடன், ஒரு பையனைக் கையில் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தார். அனுஷ்டானம் முடிந்தபின், அவர்கள் வந்தனம் செய்து எழுந்தனர்.ஸ்ரீஸ்வாமிகள் அவர்களை உட்காரச் சொன்னார்கள்.அவர்கள் உட்காரவில்லை. வந்த மனிதரும் அவர் மனைவியும், "எங்கள் மகன் இவன், புத்திஸ்வாதீனமில்லாதவனாக நடந்து கொள்கிறான்.பெரியவாள் கருணை புரியவேண்டும்...